செவ்வாய், 15 செப்டம்பர், 2009

கன்னி பதிவு

அன்பார்ந்த நண்பர்களே,
இது நான் இடும் முதல் பதிவு , நான் சுமார் ஐந்து மாத காலமாக நீங்கள் இடும் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது படித்து பார்த்து வருகின்றேன், மேலும் நீங்கள் இடும் பதிவுகளின் தாக்கத்தால் நானும் ஒரு வலை பூவை உருவாக்க வேண்டும் என்ற ஒரு அவா என் மனதில் குடி கொண்டது. மேலும் மூத்த பதிவர்கள் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து வழி நடத்துமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்,
என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம்,என் பூர்விகம் சித்தனா வாசல் (உன் புகழ் வையமும் சொல்ல சித்ன்னா வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல ......அந்த இடம் தாங்க), நான் பிறந்து வளந்த இடம் திருச்சி, பள்ளி படிப்பு ஆர்.சி மேல்நிலை பள்ளி, கல்லுரி படிப்பு தேசிய கல்லூரியில் இளங்கலை வணிக வியல் படித்து இன்று ...சவுதி அரபிய தேசத்தில் ஒரு அமெரிக்க பெட்ரோலிய நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்து வருகின்றேன்.மேலும் மிஸ்டர் அடோர் என்ற ஜிமெயில் பெயரில் இல் நிறைய பின்னுடம் இட்டு உள்ளேன்..

அப்பாடா இந்த தமிழ் லெட்டர் எழுதுறது குள்ள இப்பவே கண்ண கட்டுதே........